இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்!
ADDED : 1 hours ago
'பேட்டை, கொசலை' ஆகிய புத்தகங்களை எழுதியவர் தமிழ்ப் பிரபா. இவர் தமிழ் சினிமாவில் கதை, எழுத்தாளர் ஆக 'சார்பட்டா பரம்பரை, ப்ளூ ஸ்டார், காந்தா, தங்கலான், சொர்க்கவாசல்' உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் தமிழ்ப் பிரபா. இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.