உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை

இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை

மலர்விழி நடேசன் இயக்க, சந்தோஷ் பிரதாப் நடிக்கும் படம் ‛சிக்னல் அட் 11.30'. படம் குறித்து இயக்குனர் கூறியது, 'காலம் யாருக்காகவும் காத்திருக்காது' என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் இது. “சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இமான் இசையமைத்துள்ளார். இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதாநாயகனுக்கு நேரும் எதிர்பாராத சம்பவம் அவரது வாழ்க்கையின் திசையை எப்படி மாற்றுகிறது என்பதே கதையின் மையக்கரு” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !