உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர்

காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர்

பாலிவுட்டில் ரவி உதய்வர் இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதி, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தோ தீவானே சேஹர் மெய்ன்'. காதல் கதையில் தயாராகி உள்ள இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ளார். நாளை மறுநாள் பிப்., 20ல் படம் ரிலீஸாகிறது. இதில் பணிபுரிந்த அனுபவம், அவரது வேடம், படம் பற்றிய பல்வேறு விஷயங்களை மிருணாள் பகிர்ந்துள்ளார்.

'தோ தீவானே சேஹர் மெய்ன்' ரிலீஸாகிறது, உங்க மனநிலை எப்படியிருக்கிறது?

மிகவும் மகிழ்ச்சியாகவும் அதேசமயம் கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறேன். ஒவ்வொரு படமுமே எனக்கு சிறப்பானது. இது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஒரு அழகான காதல் கதையை சொல்கிறோம். ரசிகர்கள் இந்த படத்தை காண அவர்களுடன் சேர்ந்து நானும் ஆர்வமாய் உள்ளேன்.

படத்தில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க...?
ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நிறைய உணர்ச்சிகள், கனவுகள் மற்றும் உறவுகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளவளாக வருகிறேன். காதல், மோதல் மற்றும் சுயசார்பு தருணங்களை கடந்து செல்பவளாக நடித்துள்ளேன். இது வெறும் காதல் பயணம் மட்டுமல்ல, அவளது வளர்ச்சி, தேர்வுகள் மற்றும் தன்னைப் புரிந்து கொள்வது பற்றியது. கொஞ்சம் சவாலான வேடம் தான் ஆனால் நிறைவானது.

இந்த படத்தில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

அற்புதமான பயணமாக இருந்தது. மொத்த படக்குழுவும் ஆதரவான சூழலை உருவாக்கி தந்தனர். ஜாலியாக வேலை செய்தேன். இயக்குனரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து சக நடிகர்களின் அர்ப்பணிப்பு வரை அனைத்தும் அழகாக ஒன்றிணைந்தன. நீண்டநாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். பல மறக்க முடியாத தருணங்களும் இருந்தன.

இந்த படத்திலிருந்து பார்வையாளர்கள் எதை எடுத்துக்கொள்வார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள உணர்ச்சிகள் மற்றும் உறவுகளுடன் அவர்கள் இணைவார்கள் என்று நம்புகிறேன். இது காதல், கனவுகள் மற்றும் மனித தொடர்புகளைப் பற்றிய படம். அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய ஒன்று. பார்வையாளர்கள் அர்த்தமுள்ள ஒன்றை உணர்ந்து வெளியேறினால், நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்துள்ளோம் என்று அர்த்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !