துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ
ADDED : 21 minutes ago
நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்து கடைசியாக வெளியான 'பைசன்' படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து பல இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வருகிறார் துருவ். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல்படி இவரின் அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இதை அறிமுக இயக்குனர் தீபக் ரெட்டி என்பவர் இயக்கவுள்ளார். இதில் துருவ் விக்ரம் உடன் இணைந்து இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். ருக்மணி வசந்த் ஒரு நாயகியாக உறுதியாகியுள்ளார். மற்றொரு நாயகியாக நடிக்க ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.