உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா

சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகர் என்றாலும் இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் கதாநாயகனாகவே நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. இன்னொரு பக்கம் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் இவர், தொடர்ந்து மூன்று முறை ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் இருக்கும் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது மூன்றாம் முறையும் மக்கள் தன்னை ஹிந்துபூர் தொகுதிக்கு தேர்ந்தெடுத்துள்ளதால் அங்கேயே புதிதாக சொந்த வீடு கட்டி குடியேற முடிவு செய்துள்ளார் பாலகிருஷ்ணா.

இதனை தொடர்ந்து அங்கே தற்போது வீடு கட்டுவதற்கான பூமி பூஜையையும் நேற்று நடத்தி உள்ளார் பாலகிருஷ்ணா. என்னுடைய தந்தை என்.டி ராமராவ் 1985ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்று தான் முதலமைச்சர் ஆனார். அப்படிப்பட்ட மக்களின் அன்புக்குரிய தொகுதியில் நான் புதிதாக வீடு கட்டுவதில் பெருமைப்படுகிறேன். இனி என்னுடைய புதிய விலாசம் ஹிந்துபூர் ஆகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !