சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக்
சமீபத்தில் தெலுங்கில் கப்புள் பிரண்ட்லி என்கிற திரைப்படம் வெளியானது. தமிழிலும் இந்த படம் வெளியானாலும் கூட தெலுங்கில் இந்த படம் ஓரளவு டீசன்டான வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில் கதாநாயகியாக நடித்த மானசா வாரணாசிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் மானசா வாரணாசி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, “படத்தின் டைரக்டர் அஸ்வின் சந்திரசேகர், சாய் பல்லவியின் தீவிரமான ரசிகர். அதனால் இந்த கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறும்போது சாய் பல்லவி நடித்த படங்களில் அவரது நடிப்பை பாருங்கள் என்று எனக்கு முதலிலேயே கூறிவிட்டார். நானும் சாய் பல்லவி நடித்த படங்களை விடாமல் பார்த்தேன். அவரது நடிப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுதான் இந்த படத்தில் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார் மானசா வாரணாசி.