உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா?

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா?

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றம் வந்துள்ளது. நேற்று நடந்த தேர்தலில் தமிழ்குமரன் தலைமையிலான அணி பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது. தலைவராக தமிழ்குமரன், பொருளாளராக சுபாஷ் சந்திரபோஸ், துணைத் தலைவர்களாக ஆர்கே சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளராக ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமார் மற்றும் பெருவாரியான செயற்குழு உறுப்பினர்களாக அவர் அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். இப்போதைய தலைவராக முரளிராமசாமி அணியில் ஜெயிக்கவில்லை.

இந்த புதிய நிர்வாகிகள் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் சொன்னது மாதிரி ஏகப்பட்ட பிரச்னைகள். குறிப்பாக, சாடிலைட், ஓடிடி வியாபாரம் இல்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கி கிடக்கிறது. சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை. நடிகர், நடிகைகள் சம்பளம், படப்பிடிப்பு செலவு அதிகரித்துவிட்டது. படங்களின் வெற்றி விகிதம் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் புது நிர்வாகம் தயாரிப்பாளர்கள் குறைகளை கேட்டு, விரைவில் அதை சரி செய்து தர வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !