சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா...
ADDED : 20 hours ago
நடிகர் சூரி கதாநாயகன் அவதாரம் எடுத்த பிறகு கதைக்கு முக்கியம் வாய்ந்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது 'மண்டாடி' என்ற படத்தில் மீனவராக நடித்து வருகிறார் சூரி. இப்படம் மீனவர்கள் இடையே நடக்கும் படகு போட்டியை மையமாக கொண்ட கதையில் தயாராகிறது. இதுவரை சூரி நடித்த படங்களை விட இந்த படத்தின் பட்ஜெட் சற்று கூடுதலாகும்.
இந்த படத்திற்கு பின் ‛‛இன்று நேற்று நாளை, அயலான்' ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.