உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம்

கடந்த 2023ல் வெளியான தி கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ தீவிரவாத குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் சுதீப்தோ சென். இந்த படம் வெளியான சமயங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது.. இருந்தாலும் படம் வெற்றியை பெற்றது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தி கேரளா ஸ்டோரி 2 என்கிற பெயரில் உருவாகி உள்ளது. காமாக்யா நாராயண் சிங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படம் பிப்-27 (நாளை) வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை நாளை ரிலீஸ் செய்யக்கூடாது, மனுதாரரின் பெட்டிசன் மீது நீதிமன்றம் அடுத்த விசாரணை நடக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்ல சென்சார் போர்டுக்கும் நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. நீங்கள் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கூட கொடுத்திருக்கக் கூடாது.. ஆதனால் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படம் நாளை வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !