உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளத்தை உயர்த்தினாரா ருக்மணி வசந்த்?

சம்பளத்தை உயர்த்தினாரா ருக்மணி வசந்த்?

நடிகை ருக்மணி வசந்த் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ருக்மணி வசந்த் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு பிறகு பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் ஹீரோயின் ஆக மாறியுள்ளார். தற்போது 'டாக்சிக்', 'என்டிஆர் நீல்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ருக்மணி வசந்தை தேடி பட வாய்ப்புகள் குவிகிறது. இந்த நிலையில் இதுவரை ஒரு சில கோடிகளில் சம்பள வாங்கி தந்த ருக்மணி வசந்த் இப்போது ரூ. 5 கோடி ஒரு படத்தில் சம்பளமாக நிர்ணயம் செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !