உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம்

துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம்

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கி ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படம் அனைத்து உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடித்து உலகளவில் 1300 கோடி வசூலித்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. மார்ச் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் ஆதித்யா தரின் மனைவியும், நடிகையுமான யாமி கவுதம் துரந்தர்-2 குறித்து தனது பிரத்யேக விமர்சனத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், துரந்தர்-2 படத்தை மக்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கப் போகிறது. எனது கணவர் நம்ப முடியாத படங்களை இயக்குகிறார். அவருக்கு அந்த ஆர்வம் உண்டு. நான் ஏற்கனவே துரந்தர் 2வை பார்த்து விட்டேன். அது அசாதாரணமானது என்று தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !