உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை

துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை


திடீரென அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது, இதனால் இந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது, இந்த சமயத்தில் துபாய் சென்றிருந்த பாலிவுட் நடிகை சோனல் சவுகான் என்பவர் அங்கே இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டுள்ளார். இவர் தமிழ் தெலுங்கில் உருவான 'இஞ்சி இடுப்பழகி', பாலகிருஷ்ணா நடித்த 'லெஜன்ட், ரூலர்', பிரபாஸின் 'ஆதிபுரூஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை பதிவு ஒன்றை வைத்துள்ள சோனல் சவுகான், “மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே.. நான் துபாயில் தற்போதுள்ள சூழலில் சிக்கி தவிக்கிறேன். இந்தியாவுக்கு திரும்பும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் பத்திரமாக ஊர் திரும்புவதற்கான இந்திய அரசின் வழிகாட்டுதலையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நான் பாதுகாப்பாக ஊர் திரும்பும் விதமாக எனக்கு உதவி கிடைத்தால் நன்றி உடையவளாக இருப்பேன்” என்று கூறியுள்ளார் சோனல் சவுகான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !