உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எக்கோ பட இயக்குனருக்கு இறால் பிரியாணி விருந்தளித்த பிரபாஸ்

எக்கோ பட இயக்குனருக்கு இறால் பிரியாணி விருந்தளித்த பிரபாஸ்

மலையாளத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறிய பட்ஜெட்டில் வெளியான படம் எக்கோ. நாய்கள் தங்களது எஜமானரிடம் காட்டும் விசுவாசத்தை மையப்படுத்தி ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாக இதை இயக்கி இருந்தார் இயக்குனர் டிஞ்சித் அய்யத்தான். பல பிரபலங்களே கூட இந்தப் படத்தை ஆச்சரியப்பட்டு பாராட்டியுள்ளார்கள். நடிகர் தனுஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் டிஞ்சித் அய்யத்தானை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரபாஸ் உடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார் டிஞ்சித் அய்யத்தான்.

இந்த சந்திப்பின்போது அவருக்கு இறால் பிரியாணி விருந்தளித்து அசத்தியுள்ளார் பிரபாஸ். இது குறித்து தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள டிஞ்சித் அய்யத்தான், “சூப்பர் ஸ்டார் பிரபாஸ் உடனான சந்திப்பு நல்ல உரையாடல்கள், சிரிப்பு மற்றும் ஒரு அழகான விருந்து ஒரு அற்புதமான மாலை பொழுதாக அமைந்தது. மறக்க முடியாத நிகழ்வாக மாறிய பிரபாஸின் விருந்தோம்பலுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் டிஞ்சித் அய்யத்தான் பிரபல தயாரிப்பாளரான ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு பக்கம் இந்த சந்திப்பு ஏதேச்சையானதா அல்லது பிரபாஸ் படத்தை டிஞ்சித் அய்யத்தான் இயக்க இருக்கிறாரா என்பது போன்ற யூகங்களும் இன்னொரு பக்கம் ஹோம்பலே நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய படத்தை தான் டிஞ்சித் அய்யத்தான் இயக்க இருக்கிறார் என்றும் அதனால் தான் இந்த சந்திப்பிற்காக அவருக்கு நன்றி கூறியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !