உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!


'மேயாத மான், ஆடை' ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். 'மாஸ்டர், லியோ, விக்ரம்' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியவர். தற்போது 'சர்தார் 2, கராத்தே பாபு' ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.

தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு ரத்னகுமார், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' மற்றும் லோகேஷ் கனகராஜின் 'ஜீ ஸ்குவாட்' இருவர் நிறுவனங்களின் தயாரிப்பில் '29' என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக 'ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க 2000ம் காலகட்ட காதலை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை நேற்று அலுவலக பூஜை உடன் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !