உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை

ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது 83 வயதாகும் நிலையில் கூட தொடர்ந்து சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டு தன்னை எப்போதும் பிசியாகவே வைத்துக் கொள்கிறார். அதேபோல தனது நட்பு வட்டாரங்களுக்கும் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர் தான் அமிதாப் பச்சன். இந்த நிலையில் அவருடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் காலமானார். அவரது மரணம் அமிதாப் பச்சனை ரொம்பவே பாதித்துள்ளது.

இது குறித்து அவர் தனது பிளாக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் அன்பான இன்னொரு நண்பரை இழந்தேன். அளவற்ற பாசமும் நகைச்சுவையும் நிறைந்தவர். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் வழியை கண்டுபிடிக்கும் திறமைசாலி. அவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை.. ஆனால் அவர் போய்விட்டார் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.. ஒவ்வொருவராக அனைவரும் வெளியேறுகிறார்கள்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !