சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன்
ADDED : 1 days ago
'பராசக்தி' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள படம் 'சேயோன்'. இந்தப் படத்தை 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவீச்சில் ஆரம்பமாகவில்லை.
அதனால் கிடைத்துள்ள இடைவெளியில் சிங்கப்பூருக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள யுனிவர்சல் ஸ்டுடியோவில் அவரை சந்தித்த சிலர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. தனது மனைவி, மகள், இரு மகன்கள் ஆகியோருடன் சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சில தினங்களுக்கு முன்பு அவர் இணைந்து தயாரித்த 'தாய் கிழவி' படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அதை முடித்துவிட்டு அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார்.