உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இளையராஜா' பயோபிக் : அறிவிப்போடு கடந்து போன இரண்டு ஆண்டுகள்…

'இளையராஜா' பயோபிக் : அறிவிப்போடு கடந்து போன இரண்டு ஆண்டுகள்…

இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை 'இளையராஜா' என்ற பெயரிலேயே பயோபிக் படமாக எடுப்பதாக மார்ச் 20, 2024ம் ஆண்டு அறிவித்தனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவித்தார்கள். அதற்காக நடைபெற்ற அறிவிப்பு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரையுலகின் முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், படத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. கடந்த மாதம் இந்தப் படத்திலிருந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் விலகியதாகத் தகவல் வெளியாகியது. அது உண்மையல்ல, அவர் தொடர்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் நடிக்க 'டிசி' படத்தை இயக்கி வரும் அருண் மாதேஸ்வரன், அப்படத்தை முடித்த பிறகு 'இளையராஜா' பயோபிக்கை இயக்குவார் என்றார்கள்.

இளையராஜா போன்ற சாதனையாளர் ஒருவரின் படத்தை அறிவித்துவிட்டு, இரண்டு வருடங்களாக ஆரம்பிக்காமல் இருப்பது சரியா என இளையராஜா ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !