உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண்

அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண்

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமானது சிரஞ்சீவி குடும்பம். அவரது முதல் தம்பி நாகேந்திர பாபு, இரண்டாவது தம்பி பவன் கல்யாண் ஆகியோரும் பிரபல நடிகர்கள். பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருக்கிறார்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ், மகள் நிஹாரிகா கொனிடலா ஆகியோரும் நடிப்புத் துறையில் உள்ளனர். நிஹாரிகா தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

நிஹாரிகா ஏற்கெனவே தயாரிப்புத் துறையில் இறங்கி சில படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அவர் தயாரிக்க, அவரது சகோதர் வருண் தேஜ் நாயகனாக நடிக்க, புதிய படமான 'பாரி' தெலுங்குப் படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பவன் கல்யாண் வாழ்த்தினார். கிளாப் அடித்து படப்பிடிப்பையும் துவக்கி வைத்தார்.

பவன் கல்யாண் காலில் விழுந்து நிஹாரிகா, வருண், இவரது மனைவி, முன்னாள் நடிகை லாவண்யா ஆகியோரும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

யது வம்சி இயக்கத்தில் வாலிபால் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. 2027 பொங்கலுக்கு படத்தை வெளியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !