உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 3 முதல் சதவீத முறைக்கு மாறும் தெலுங்கானா தியேட்டர்கள்

ஏப்ரல் 3 முதல் சதவீத முறைக்கு மாறும் தெலுங்கானா தியேட்டர்கள்


ஓடிடி தளங்கள் பிரபலமான பிறகு சினிமா தியேட்டர்களை நடத்துவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என கடந்த சில வருடங்களாக தியேட்டர்காரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

புதிய படங்கள் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடி தளங்களுக்குப் படங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, எட்டு வாரங்களுக்குப் பிறகே கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள் சார்பாக நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அப்போது தெலுங்கானாவில் எதிர்காலத்தில் சதவீத முறையில் மட்டுமே படங்களைத் திரையிட வேண்டும் என்ற முடிவும் எட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் ஹைதராபாத்தில் உள்ள 23 தியேட்டர்களில் சதவீத முறையில் மட்டுமே திரைப்படங்களைத் திரையிட உள்ளதாக தெலுங்கானா மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

அதன்படி முதல் வாரத்தில் 60 சதவீதம், இரண்டாவது வாரத்தில் 50 சதவீதம், மூன்றாவது வாரத்தில் 40 சதவீதம் என்ற வகையில் வினியோகஸ்தர்கள் பங்கு தரப்பட உள்ளது. இது போகப் போக மாநிலம் முழுவதும விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !