உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நயன்தாரா மீது எழும் விமர்சனங்கள்
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்திஷெட்டி நடித்த 'எல்ஐகே' படம் வெளியாகி, சுமாராக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ், லலித்குமார் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். பட புரமோஷன் பணிகளை விக்னேஷ்சிவன், ரவுடிபிக்சர்ஸ் டீம்தான் கவனித்தது. பொதுவாக, தான் நடிக்கும் பட விழாக்களில் நயன்தாரா கலந்து கொள்ளமாட்டார், தான் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டுவிழா, புரமோஷன்களுக்கு நயன்தாரா வரமாட்டார். தனது படம் குறித்து பேட்டி கொடுக்கமாட்டார். இதை பாலிசியாக வைத்து இருந்தார்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் நயன்தாரா நடித்தாலே பெரிய விஷயம் என்ற மனநிலையில் இருந்தார்கள். நயன்தாராவின் இந்த பாலிசியை யாரும் தட்டி கேட்டது இல்லை. பல ஆண்டுகளாக இந்த போக்கு தொடர்ந்தது. அதேசமயம், எல்ஐகே படத்திற்காக கடந்த வாரம் சென்னையில் நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டில் நயன்தாரா கலந்துகொண்டார். அவர் மேடையில் பேசாவிட்டாலும், மேடையில் ஏறி கணவனுக்கு சப்போர்ட் செய்தார். பின்னால் கேரவனில் இருந்து அந்த விழாவை ஒருங்கிணைத்தார்.
எல்ஐகே படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ அதிகமாக, சமீபத்தில் சென்னை கமலா தியேட்டருக்கு தனது கணவன், இயக்குனரான விக்னேஷ்சிவனுடன் விசிட் அடித்தார். அதை வீடியோவாக வெளியிட்டு பப்ளிசிட்டிக்கு உதவினார். இப்படி எந்த படத்துக்கும் நயன்தாரா செய்தது இல்லை. தனது கணவர் வெற்றிக்காக இப்படி செய்கிறார். தனது பாலிசியை மாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதேபோல் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலகோடி முதலீடு போட்டு, வெற்றிக்காக ஏங்கினார்கள். அவர்கள் பலமுறை அழைத்தும் நயன்தாரா விளம்பர விஷயத்தில் உதவவில்லை. தனது கணவர் படம், தன் பணம் என்பதால் இப்படி மாறியிருக்கிறார். உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கிறார்கள். இனிமேலாவது தனது பட விழாக்களுக்கு எல்ஐகே பாணியில் வருவாரா என பார்க்கலாம்.