உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ?

ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ?

தமிகத்தை கடந்த ஐந்தாண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பறி கொடுத்தது. அது மட்டுமல்ல ஸ்டாலின் கூட அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரப்போகும் நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், ஸ்டாலினுக்கு யாருமே எந்தவிதமான ஆறுதல் பதிவுகளையும் எக்ஸ் தளத்தில் போடவில்லை.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்” எனப் பேசியுள்ளார்.

இவர்களது இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

தேர்தலுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

ஸ்டாலினுடனான ரஜினிகாந்த்தின் சந்திப்பு அவருடைய விஜய் எதிர்ப்பு நிலையை தொடர்வதாகவே காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

srini, chennai
2026-05-06 17:12:44

ரஜினிகாந்த் அவர்களே...உங்களைப்போல் ஒரு கோழை...உங்களைப்போல் தன் சொத்துக்கும் சுகத்துக்கும் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்...யாருக்கும் இருந்ததில்லை. நீங்கள் சொல்லலாம் நான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று. பின் எதற்காக 1996 இல் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தீர்கள். இன்று வருவேன் நாளை வருவேன் நாளை மறுநாள் வருவேன் வந்தாலும் வருவேன் வராமலும் இருப்பேன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்...என்று டயலாக் விட்டு ரசிகர்களை உசுப்பி நீங்கள் கொழுத்து முதலீடுகளை கர்நாடகாவில் பண்ணி தமிழ் ரசிகர்களை ஏமாற்றி முதுகில் குத்தி...இன்னும் நடித்து எங்களை டார்ச்சர் பண்ணி...போதும் டா சாமி...இனி எப்போது நீங்கள் நடிப்பதை நிறுத்தப்போகிறீர்கள்...விஜய் முதலமைச்சர் ஆகப்போகிறார் என்று தெரிந்து உங்கள் வயிறு எரிகிறதோ...ஏன் எடப்பாடி யை சந்திக்கவில்லை...உன் முதலாளி எலும்புத்துண்டை தூக்கிப்போடும் முதலாளிக்கு ஒன்று என்றால் உம்மால் தாங்க முடியாதோ ?. உங்களை ரசித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. நல்ல வாய்ப்பை தவறவிட்ட உம்மைப்போல் coward ஐ நான் பார்த்ததே இல்லை. நீர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இளைஞர்கள் சிகரெட் பிடிக்க கற்று கொடுத்தீர். இன்னும் பணத்தாசை விடவில்லை. 80 வயதிலும் இன்னும் நடித்து எங்களை துன்புறுத்துகிறீர். தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் ஐயா.