'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் 'கருப்பு'. இப்படம் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம் தேதிதான் வெளியானது. ஒரு நாள் தள்ளிப் போனாலும் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2026ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூலைக் கொடுத்த படமாக இப்படம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் மூன்று நாளில் 147 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டின் முதல் பெரிய வெற்றியாக இந்தப் படம் அமைய உள்ளது. கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்கள் உள்ளநிலையில், அதற்குள் வேறு பெரிய படங்களும் ரிலீசாகாததால் இன்னும் வசூலை குவிக்கும் என்கின்றனர்.