வாழை 2 படம் குறித்து புதிய தகவல்
ADDED : 4 minutes ago
இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில், நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தொடங்குவதில் இன்னும் கால அவகாசம் ஏற்படும் என்பதால் இதற்கிடையில் மாரி செல்வராஜ் குறுகிய கால கட்டத்தில் வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக கதிர் நடிக்கவுள்ளார். மற்றும் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன், கயடு லோகர் என இருவரும் நடிக்கவுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. வாழை 2 படத்தை ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார் மாரி செல்வராஜ். மேலும், முதல்முறையாக மாரி செல்வராஜ் படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.