உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டெலிகிராமிற்கு மீண்டும் ‛செக்' வைத்த மத்திய அரசு

டெலிகிராமிற்கு மீண்டும் ‛செக்' வைத்த மத்திய அரசு

இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் ‛டெலிகிராம்' முக்கியமானது. கோடிக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்துகின்றனர். இதில் நிறைய சர்ச்சைகளும் அவ்வப்போது நடக்கிறது. ஏற்கனவே இந்த செயலியில் திரைப் படங்களை சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்வது தொடர்பான பிரச்னை உள்ளது. சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் லீக் தொடர்பான பிரச்னையிலும் டெலிகிராம் செயலி சிக்கியது. இதனால் டெலிகிராம் சில நாட்கள் இந்தியாவில் முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு அடுத்த செக்கை டெலிகிராமிற்கு வைத்துள்ளது. சினிமா மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யும் டெலிகிராம் சேனல்களை முடக்க வேண்டும் என டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி 15 நாட்களுக்குள் எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை சமர்பிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் உரிமையாளர்கள் தங்களின் படைப்புகள் டெலிகிராம் தளத்தில் திருட்டுத்தனமாக பகிரப்படுவதாக அளித்த தொடர் புகாரின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !