உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' கல்யாணம்

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' கல்யாணம்

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, அடுத்தப்பட வேலைகளில் இறங்கி உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. தனது படத்தில் நடித்த நடிகையும், இயக்குனர் அகத்தியனின் 3வது மகளுமான நிரஞ்சனியை திருமணம் செய்கிறார். இது காதல் திருமணம். ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி ஏராளமான படங்களில் பணியாற்றி உள்ளார். விரைவில் திருமணம் தேதியை அறிவிக்க உள்ளனர்.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்...' என்ற பாடல் இவர்களுக்கு பொருந்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !