உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் அக்சய் குமார் படம் ரிலீஸ் இல்லை

மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் அக்சய் குமார் படம் ரிலீஸ் இல்லை

பாலிவுட்டின் பிரபல கூட்டணியான இயக்குனர் ரோஹித் ஷெட்டி, நடிகர் அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'சூர்யவன்ஷி'.. காத்ரீனா கைப் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் வரும் ஏப்-2ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால் தற்போது அதன் ரிலீஸில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

அதாவது இந்தப்படம் ஓடிடிக்கு கொடுக்கப்படாமல் நேரடியாக தியேட்டர்களிலேயே தான் வெளியாக இருக்கிறது. ஆனால் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிடுவதில் லாப சதவீதம் குறித்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அதனால் பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவல் போன்ற மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் சூர்யவன்ஷி ரிலீஸாகது என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் ஒற்றை தியேட்டர்களில் இந்தப்படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இல்லையாம். இப்படி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் படத்தை வெளியிட்டால், அது இருதரப்புக்குமே நட்டத்தையே ஏற்படுத்தும் என விநியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !