உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் வர்தா ஆன மலையாள சால்மன்

தமிழில் வர்தா ஆன மலையாள சால்மன்

பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ள மலையாள படம் சால்மன். 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்த படத்தை டால்ஸ் மற்றும் கட்டுமக்கான் படங்களை இயக்கிய ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது.

இப்படத்தில் விஜய் யேசுதாஸ் ஜோடியாக ஜொனிடா நடித்துள்ளார். இப்படம் ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது . ஸ்ரீஜித் இசை அமைத்துள்ளார், ராகுல் மற்றும் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் ஷலீல் கல்லூர் கூறியதாவது: சால்மன் என்பது ஒருவகை கடல் மீன். பிறக்கும்போதே அநாதையான இந்த மீன் அனைத்து தடைகளையும் சூழல்களையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் கடலிலேயே பயணிக்கிறது. அதுபோலவே இப்படத்தின் கதை வாழ்வின் கறுப்பு பக்கங்களை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை இப்படம் பேசுவதால் இப்படத்திற்கு சால்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !