குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறினார் பவித்ரா
விஜய் டி.வியில் பலரையும் கவர்ந்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. உலகம் முழுக்க டிவியில் சமையல் நிகழ்ச்சி இருந்தாலும், அதையும் காமெடி மற்றும் 100 சதவிகித எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாக்கி அசத்தி வருகிறது சேனல்.
மற்ற கேம் ஷோக்களை போன்று இதிலும் எலிமினினேஷன்களும், டாஸ்களும் இருப்பது நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சினிமாவில் நடிக்க தேர்வாகிற அளவிற்கு நிகழ்ச்சி பிரபலமாகி இருக்கிறது.
குக் வித் கோமாளி 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, ரித்திகா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டனர். தற்போது அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லக்ஷ்மி ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர். இந்நிலையில் இதுவரை நிகழ்ச்சியில் கலக்கி வந்த பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் நிகழ்சியில் பேசியதாவது: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்ததால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதாக கூறுகின்றனர். ஆனால் நான் இதில் பங்கேற்றதால் மன அழுத்தத்தை குறைத்திருக்கிறேன். என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி. என்றார் பவித்ரா.