உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ருதிஹாசனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த படம்

ஸ்ருதிஹாசனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த படம்

தெலுங்கில் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வரும் ஹீரோக்களுடன் ஸ்ருதிஹாசன் இணைந்தால் அந்த படம் ஹிட் அடித்து விடும். அப்படித்தான் சமீபகாலமாக நடந்து வருகிறது. இதனால் டோலிவுட்டில் அவரை ஹிட் பட நாயகியாக கருதத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் தற்போது பிரபாசுடன் முதன்முறையாக சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இதற்கு முன்பு ரவிதேஜாவுடன் நடித்த கிராக் படத்தில் போலீசாக நடத்தவர், இந்த சலார் படத்தில் தொலைக்காட்சி நிருபராக நடிக்கிறார். அதிலும் சுரங்க தொழிலில் ஊழல் செய்யும் பெரும்புள்ளிகளை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் அரசியல் பத்திரிகையாளர் வேடம்.

அதனால் சலார் படத்தில் பிரபாசுடன் நடிக்க சான்ஸ் கிடைத்ததையே மகிழ்ச்சியாக நினைத்த தனக்கு, இரண்டு பாட்டுக்கு வந்து நடனமாடி விட்டு செல்லும் வழக்கமான நாயகி வேடமாக இல்லாமல்,அழுத்தமான நிருபர் வேடம் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறாராம். அந்த வகையில் சலார் படம் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !