உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனா பாதிப்பு : இயக்குனர் தாமிரா காலமானார்

கொரோனா பாதிப்பு : இயக்குனர் தாமிரா காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா 52, காலமானார்.

மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா என்ற காதர் முகைதீன். திருநெல்வேலியை சேர்ந்த இவர் கடந்த 2010ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் ரெட்டைச் சுழி என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பாரதிராஜா, பாலச்சந்தர் என்ற தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குநர்களை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார்.

ஆனால் ரெட்டைச் சுழி எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதன் பின் பல ஆண்டுகள் கழித்து சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் ஆண் தேவதை என்கிற திரைப்படத்தை தாமிரா இயக்கியிருந்தார். இந்தப் படமும் சுமாரான வெற்றியே பெற்றது. அதன்பின் டிவி தொடர்களை இயக்கி வந்தார்.

சமீபத்தில் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 27) காலை, சிகிச்சை பலனின்றி தாமிரா உயிரிழந்தார். தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !