உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பிய சோனுசூட்

கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பிய சோனுசூட்

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் மக்களுக்கு பல வகையில் உதவி செய்து நிஜ ஹீரோவானார் சினிமா வில்லன் சோனு சூட். தற்போது 2வது அலையிலும் தனது பணியை தீவிரமாக தொடங்கி உள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளியை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போகுமாறு கூறியுள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் இடம் இல்லை. அதனால் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் சோனுசூட்டுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதை அறிந்த சோனுசூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுடன் ஜான்சிக்கு ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்ந்தார். தற்போது சிகிச்சை பெற்று வரும் , அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதனால் சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !