மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1584 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1584 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1584 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1584 days ago
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடால் நாடே அமைதி இழந்து தவிக்கிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள், இந்தியாவுக்கு இயன்ற அளவில் உதவ வேண்டும் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜேம்ஸ் மெக்கே, வில் ஸ்மித், நிக் ஜோனஸ், கேட்டி பெர்ரி உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் இந்தியாவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் இந்தியாவுக்காக குரல் கொடுக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. புதிய பாதிப்புகள் கடந்த 5 நாட்களாக புதிய உச்சம் தொட்டு வருகின்றன. நீங்கள் நிதி உதவி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களால் முடிந்த தளத்தில் விழிப்புணர்வை உருவாக்க குரல் கொடுங்கள். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எக்ஸ் மென், ஸ்பிலிட் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜேம்ஸ் மெக்அவாய். அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் இப்போது இந்தியாவின் நிலை தெரியும். இப்போது மிக மோசமாக இருக்கிறது. அங்கு மிகப்பெரிய நெருக்கடி நிலவி வருகிறது. போதுமான ஆக்சிஜன் இல்லை. உங்களிடம் பணம் இருந்தால் நல்லது. இல்லையென்றால், இதுகுறித்து மற்றவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் இதற்கு கவனம் கொடுத்தாலே போதும். இந்தியாவின் நிலை நன்றாக ஆகும் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். என்று பேசியுள்ளார். நன்கொடை செலுத்த வசதியாக அற்கான லிங்கையும் வெளியிட்டுள்ளார்.
1584 days ago
1584 days ago
1584 days ago
1584 days ago