உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலர் வரைந்த ஓவியத்துடன் ஸ்ருதிஹாசன்

காதலர் வரைந்த ஓவியத்துடன் ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தனது காதலரான ஓவியர் சாந்தனு ஹசரிகா உடன் மும்பையில் உள்ள தனது வீட்டில் லிவிங்-டு-கெதர்-லைபில் இருக்கிறார்.

இந்த கொரோனா ஊரடங்கு தளர்வில் காதலருடன் இணைந்த சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டார். இன்று காதலர் வரைந்த ஓவியங்களுக்கு முன்பாக அமர்ந்து சில போட்டோக்களை எடுத்து அவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.




“நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கிய சொர்க்கம். எங்கள் கனவுகள் அனைத்தையும் வைத்திருக்க, அவற்றை எண்ணும் உலகம், வண்ணங்களில் சொட்டுகிறது, வளையங்களில் மூடப்பட்டிருக்கிறது. விலங்குகளின் காலால் உருவான பெயின்ட்டிங்குகள், இந்த சிறியனவற்றால் உருவான வீடு. இந்த இருண்ட காலங்களில் கூட எப்போதும் உங்கள் சொந்த சொர்க்கத்தை உருவாக்குங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது காதலைப் பற்றியும், தனது காதல் வாழ்க்கையைப் பற்றியும் எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லாமல் ஸ்ருதிஹாசன் தனது பர்சனல் வாழ்க்கையைப் பகிர்ந்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !