மூன்று மாத ஓய்விற்கு பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார் சமந்தா
ADDED : 1567 days ago
தி பேமிலிமேன் 2 வெப்சீரிஸை தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடிக்கிறார் சமந்தா. மேலும், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப்தொடரில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அதை மறுத்தார் சமந்தா. கடந்த 3 மாதங்களாக எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார் சமந்தா.
இந்நிலையில் தெலுங்கில் அவர் நடிக்கும் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் சமந்தாவும் கலந்து கொள்கிறார். குணசேகர் இயக்கும் இந்த சகுந்தலம் படம் மகாகவி காளிதாசரின் சமஸ்கிருத நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.