ராஜமவுலி - மகேஷ்பாபு பட கதையை லீக்அவுட் செய்த விஜயேந்திர பிரசாத்
ADDED : 1581 days ago
தனது மகன் ராஜமவுலி இயக்கும் படங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என மற்ற மொழிகளில் உள்ள பிரபல ஹீரோக்களின் படங்களுக்கும் கதை எழுதி வருகிறார் விஜயேந்திர பிரசாத். இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் மகேஷ்பாபு, பவன்கல்யாண் என இருவரது படங்களுக்கும் கதை எழுதி வருகிறார். இதில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலியே இயக்குகிறார்.
மகேஷ்பாபுவிற்கு தான் எழுதி வரும் கதை குறித்து ஒரு பேட்டியில் விஜயேந்திர பிரசாத் கூறுகையில், மகேஷ்பாபுவிற்கான கதையை எனது மகன் ராஜமவுலியுடன் கலந்து ஆலோசித்து எழுதி வருகிறேன். இந்த படத்தின் கதை ஆப்பிரிக்கா காடுகளின் பின்னணியில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகிறது என்று தெரிவித்துள்ளார்.