உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரைப்பட தொழிலாளர்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்: அக்ஷய்குமார் வேண்டுகோள்

திரைப்பட தொழிலாளர்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்: அக்ஷய்குமார் வேண்டுகோள்

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பாலிவுட் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் அக்ஷய்குமாரும், சோனு சூட்டும். அக்ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 கோடி வரை நிதி உதவி செய்தார். இரண்டாவது அலையிலும் இதுவரை 5 கோடிக்கு மேல் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் சினிமா கலைஞர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தேவையான தருணங்களில் கலைஞர்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த முக்கியமான காலகட்டத்தில் மக்கள் முன்வந்து அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !