133 வருட அரசு பள்ளியை தத்தெடுத்த கிச்சா சுதீப்
ADDED : 1570 days ago
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது கல்வி உதவியாகவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிச்சா சுதீப் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரான சிவமோகா பகுதியில் உள்ள 133 வருடங்கள் பழமைவாய்ந்த அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
இந்த பள்ளியின் கட்டடங்களை புதுப்பித்துக் கொடுப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர் செய்து கொடுக்க இருக்கிறாராம். அவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் இவ்வாறு செய்வது முதன் முறை அல்ல.. ஏற்கனவே கடந்த வருடம் சித்ரதுர்கா பகுதியிலுள்ள நான்கு பள்ளிகளை தத்தெடுத்து இதுபோல உதவி செய்துள்ளார் கிச்சா சுதீப்.