பேச்சுவார்த்தைக்கு தயார்
ADDED : 1598 days ago
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவறான புரிதல் இன்றி தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடை களைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்த தயார் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சி சார்பில் கடிதம் அனுப்ப உள்ளனர். இதையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு குறித்தும் பேச உள்ளனர்.