உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வில்லனுக்கு மரியாதை: ஹரி தொடங்கிய புதிய கலாச்சாரம்

வில்லனுக்கு மரியாதை: ஹரி தொடங்கிய புதிய கலாச்சாரம்

படப்பிடிப்பு முடிந்து விடைபெறும் முக்கிய நடிகர் நடிகைகளை மரியாதை செய்து அனுப்பி வைக்கும் புதிய கலாச்சாரத்தை இயக்குனர் ஹரி தொடங்கி வைத்துள்ளார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் வில்லனாக கேஜிஎப் படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. கருடா ராம் நடிக்க வேண்டிய காட்சிகள் நேற்றுடன் முடிந்தது.

அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள். இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் மற்றும் இணை தயாரிப்பாளர் அருண்குமார் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதுகுறித்து கருடா ராம் கூறியதாவது: கேஜிஎப் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் . என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !