அங்காடித்தெரு கனவு மெல்ல நிறைவேறுகிறது - இயக்குனர் நெகிழ்ச்சி
ADDED : 1592 days ago
தமிழக அரசு, கடையில் தொழிலாளர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களின் இத்தகைய கஷ்ட நிலையை, அங்காடித்தெரு படத்தில் இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பார்.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து சமூகவலைதளத்தில் அவர் கூறியதாவது: அங்காடித்தெரு படத்தின் கனவு மெல்ல நிறைவேறுகிறது. அப்படத்தில் நின்று கொண்டே பணியாற்றுவதால் ஏற்படும் வெரிகோஸ் நோய் பற்றி கூறியிருந்தேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.