தட்சிணாமூர்த்தி காட்டும் சின்முத்திரையின் பொருள் என்ன?
ADDED :2260 days ago
சின் – அறிவு; முத்திரை – அடையாளம். அறிவின் அடையாளம் இது. மனிதனாக மண்ணில் பிறந்ததன் நோக்கமே மோட்சம் அடைவது தான். ஆனால் சுகபோகங்களில் இருந்து விலகி, நல்வழிப்படுத்தவே சின்முத்திரையுடன் அருள்கிறார் சிவன். இந்த முத்திரையில் ஒவ்வொரு விரலுக்கும் தனித்தனி பொருள் உண்டு.
* கட்டை விரல் – சிவன்
* ஆள்காட்டி விரல் – மனிதன்
* நடு விரல் – ஆணவம்
* மோதிர விரல் – கர்மா (வினை)
* சுண்டு விரல் – மாயை
ஆள்காட்டி விரலாகிய மனிதன் ஆணவத்துடன் செயல்பட்டு (கர்மா) உலக மாயையில் சிக்கு கிறான். இதிலிருந்து விலகி கட்டைவிரலான சிவனைச் சரணடைந்தால் மோட்சம் கிடைக்கும். இதை உணர்த்தவே தட்சிணாமூர்த்தி ஆள்காட்டி விரலை மடக்கி, மற்ற விரல்களை நீட்டியபடி இருக்கிறார்.