உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரலிங்கம் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்

சங்கரலிங்கம் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்

மதுரை: கார்த்திகை மாதம் இரண்டாம் சோம வாரத்தை முன்னிட்டு, சங்கர லிங்கம் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.    

மதுரை   மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் கார்த்திகை இரண்டாம் சோம வாரத்தை முன்னிட்டு, நேற்று 108 சங்காபிஷேகம் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.  நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றத.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கர லிங்கம் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, தேன், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம்  பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !