ஆலகால ஈஸ்வரர்!
ADDED :2469 days ago
செஞ்சியையடுத்த ஆலம் பூண்டியில் ஆலகால ஈஸ்வரர் எனும் பெயரில் சிவன் அரு ள்பாலிக்கிறார். சிவன் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, இங்குள்ள மலைமீது தன் திருப்பாதங்களைப் பதித்ததாக ஐதிகம். இப்பாதங்கள் மலைக்குன்றின் உச்சியில் உள்ளன. ஆண்டுதோறும் மலைவாழ் மக்கள் இத்திருப்பாதங்களுக்கு விழா எடுப்பர். கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வணங்கி வருகின்றனர்.