உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12 மணி நேரத்தில் கோயில் கட்டி சாதனை

12 மணி நேரத்தில் கோயில் கட்டி சாதனை

திருப்பதி: ஆந்­தி­ரா­வில் 12 மணி­நே­ரத்­தில் காளி கோயில் கட்டி கிரா­மத்­தி­னர் சாதனை படைத்­துள்­ள­னர். ஆந்­திர மாநி­லம் கர்­ணுால் மாவட்­டத்­தி­லுள்ள பாத­கந்­து­கூறு கிரா­மத்­தில் வசிப்­ப­வர்­கள் ஒரு காளி கோயிலை கட்ட முடிவு செய்­த­னர். அதற்­காக 7 லட்­சம் ரூபாய் நிதி திரட்­டி­னர். பின் ஆயத்த நிலை­யில் உள்ள சிற்ப வேலை செய்த சிமென்ட் பிளாக்­கு­களை வாங்கி வந்­த­னர். அதை பயன்­ப­டுத்தி கடந்த 1ம் தேதி காலை 8:00 மணிக்கு கோவில் கட்­டும் பணியை துவங்கி அன்று இரவு 8:00 மணிக்கு கட்­டப்­ப­ணியை நிறைவு செய்­த­னர். இப்­ப­ணி­யில் 20 சிற்­பி­கள் 100 கிரா­ம­வா­சி­கள் பங்கு கொண்­ட­னர். பல மாதங்­கள் முயன்று கட்ட வேண்­டிய கோயிலை அவர்­கள் 12 மணி­நே­ரத்­தில் கட்டி முடித்து சாதனை செய்­த­னர். டிச.6ம் தேதி கோயி­லில் காளி சிலை பிர­திஷ்டை நடக்க உள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !