கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா
ADDED :20 minutes ago
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், தை மாதம் கொண்டாடப்படும் ரத சப்தமி விழா சிறப்பு வாய்ந்தது.
நேற்று இவ் விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், காலை, 7:00 மணி முதல் சூர்ய பிரபை, சேஷ, யாளி, குதிரை, ஹனுமந்த, சந்திரபிரபை ஆகிய ஏழு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.