உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலங்கையின் பழமையான முருகன் கோயில்

இலங்கையின் பழமையான முருகன் கோயில்

இலங்கையிலுள்ள பழமையான முருகன் கோயில் கதிர்காமத்தில் உள்ளது. கதிர்  என்றால் ஒளி. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளிப்பிழம்பாக வந்ததால்  முருகனுக்கு கதிர்வேலன் என்று பெயர்.


ஒளியாகத் தோன்றிய முருகன்  பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவராக இருப்பதால் இத்தலம் கதிர்காமம்  எனப்பட்டது. கதிரமலை, கதிர்காமன், கதிரேசன் என குழந்தைகளுக்கு பெயரிடும்  வழக்கம் உள்ளது.  17ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய கொள்ளை கும்பல் ஒன்று இத்தலத்திற்கு  திருட வந்தது. இது குறித்து ரீபெய்ரோ என்பவனின் டைரி குறிப்பில், ”எங்கள்  கும்பலில் உள்ள ஐந்து பேர் கதிர்காமம் கோயிலுக்கு கொள்ளையடிக்க  வரிசையாக அனுப்பப்பட்டோம். வழியிலேயே புத்தி தடுமாற்றம் அடைந்து உளறத் தொடங்கினோம். கடைசி வரை திருடும் நோக்கம் கைகூடவில்லை” என  குறிப்பிட்டுள்ளான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !