கிருஷ்ணராயபுரம் மகாதானபுரத்தில் கமலானந்த சுவாமி ஆராதனை கொண்டாட்டம்
ADDED :2241 days ago
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம், சிருங்கேரி சாரதா பீடம் கமலானந்த நரசிம்ம பாரதி சுவாமி கள், 91வது ஆராதனை விழா நேற்று (டிசம்., 4ல்) நடந்தது. விழாவில், கமலானந்த சுவாமி படத் திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ருத்ர அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு பக்தி பாடல்கள் பாடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.