ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி
ADDED :2320 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி உற்ஸவம் நடந்தது.
இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் பகல்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்ற சிறப்பு பூஜைகளை ஹரீஸ்பட்டர் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு துவங்கிய உற்ஸவம் நேற்று அதிகாலை முடிந்தது. அரையர் பாலமுகுந்தன், அரையர் வியாக்யானம் படித்தார்.வேதபிரான் சுதர்சன் கைசிக புராணம் வாசித்தார். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் அனந்தராமன், மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமஷே் மற்றும் கோயில்பட்டர்கள்,அலுவலர்கள் பங்கேற்றனர்.