உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மை நோய் குணமாக வணங்க வேண்டிய அம்மன்!

அம்மை நோய் குணமாக வணங்க வேண்டிய அம்மன்!

அம்மை குணமாக கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மனை தரிசிப்போம்.

திப்புசுல்தானின் படைவீரர்கள் இப்பகுதியில் தங்கியிருந்தனர். அதில் ஒருவர் மாரியம்மனின் பக்தராக இருந்தார்.

ஒருநாள் அவரது கனவில் தோன்றி, ‘‘இந்த பகுதியில் ஓடும் ஓடைக்கு
அருகில் நான் குடியிருக்கிறேன். என்னை பிரதிஷ்டை செய்’’ என கட்டளையிட்டாள். அவரும் அம்மன் சிலையை கண்டுபிடித்தார். ‘தண்டு’ என்றால் படை வீரர்கள் தங்கியிருக்கும் கூடாரம். இதனால் அம்மனுக்கு ‘தண்டு மாரியம்மன்’ என பெயர் வந்தது. பின்னர் கோயில் கட்டப்பட்டது.

முன்பு காலரா, அம்மை, பிளேக் நோய்கள் மக்களை வாட்டியது. அம்மனின் பிரசாதமான வேப்பிலை, தீர்த்தத்தின் மூலம் குணம் அடைந்தனர். அம்மை, தோல், வெப்ப நோய்கள் என எதுவானாலும் இங்கு வழிபட்டால் குணமாகும்.
பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சித்திரையில் தேர்த்திருவிழா நடக்கிறது.  

எப்படி செல்வது: கோயம்புத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 1:00 மணி; மாலை 4:00 – 9:00 மணி
தொடர்புக்கு: 0422 – 230 0360


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !