உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பிரம்மோற்ஸவம்; சேஷ வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் உலா

ஆடி பிரம்மோற்ஸவம்; சேஷ வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் உலா

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் சேஷ வாகனத்தில் பெருமாள் உலா வந்தார்.


பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. நேற்று மாலை 6:30 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து வேத பாராயணம், பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி சென்றனர். இன்று கருட வாகனத்தில் எழுந்தருள உள்ளார். கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !